அதில் 36 மதிப்பெண் பெற்ற ஜோசப் என்பவருக்கு பணி வழங்காமல் வெறும் 5 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு பணி வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்.
இதை எதிர்த்து ஜோசப் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்தார். வழக்கு விசாரணையின் போது 5 மதிப்பெண் மட்டுமே பெற்ற ஓருவரை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆசிரியர் தேர்வு வாரியம் பொதுப்பிரிவில் யாருமே இல்லை. அதனால் தான் 5 மதிப்பெண் பெற்ற வரை தேர்வு செய்ததாக கூறியது.
ஆனால் இதை ஏற்க மறுத்த மாண்புமிகு நீதிபதி நாகமுத்து அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்ததுடன், வழக்கு பதிவு செய்த ஜோசப் அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
ஆதாரம்: சன் நியூஸ்
No comments:
Post a Comment