Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 3, 2014

    பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வினா-விடை கையேடு

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாட வல்லுனர் குழுவினர் "சிறப்பு வினா விடை கையேடு" தயாரித்துள்ளனர். இதைகொண்டு, காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்யும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.


    மார்ச் 26ல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 3ல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் அரசு பொது தேர்வு துவங்க உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற, வினா விடை கையேடு தயாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி, பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, 100 சதவீத தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் வினா விடை கையேடு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதை, தமிழ், ஆங்கிலம் என,இரண்டு மொழிகளில் தயாரித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, காலை-மாலை வேளைகளில் சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர். "இதன்படி மாணவர்கள், அரசு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி அடைய முடியும்" என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: