Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 28, 2014

    அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்

    மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால், அரசு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.


    தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புள்ளி விவரத்தை, அனைவருக்கும் கல்வி இயக்கம் அடிக்கடி கேட்கிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்கம் கேட்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்தரம், கல்வி உதவிதொகை, விளையாட்டு ஆர்வம் போன்ற தகவலை பலமுறை அனுப்பியும், மீண்டும் கேட்பதால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் "டென்ஷன்" ஆகின்றனர்.

    அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தற்போது ஒவ்வொரு நாளும் முக்கிய நாட்களாக இருப்பதால், பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்துகின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, நாட்களை எண்ணி, திட்டமிட்டு செயல்படுகின்றனர். இந்நிலையில், கேட்ட தகவலையே மீண்டும் கேட்பதால், அதை தயாரிக்கும் போது, கற்பிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விலகுகின்றனர். மாணவர்களின் கவனமும் சிதறும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.

    பள்ளிகளில் நலதிட்டம் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தினால், ஆசிரியர்கள் கற்பிப்பதில் இருந்து விலக மாட்டார்கள், மாணவர்களின் கவனமும் சிதறாமல் இருக்கும். இதற்கான ஏற்பாடை கல்வித்துறை உயர் அதிகாரிகள் செய்ய வேண்டும்.

    No comments: