Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 26, 2014

    ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது 'களங்கம்' முதல்வர் ஜெ., தடுக்க வேண்டும்.

    ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது 'களங்கம்"ஆசிரியர் பணியிட மாறுதலில், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது,” என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

    அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் பிப்.,2 ல், ஊர்வலம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூனில் நடக்கும், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தவிர, ஆண்டு முழுவதும் பணியிட மாறுதல், பணத்தை பெற்றுக் கொண்டு நடக்கிறது. இந்த மாறுதல் நடவடிக்கையை, முதல்வர் ஜெ., தடுக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களை போல, இன வாரியான இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்.

    பங்கேற்பு:




    ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, அதற்கான பணத்தை செலுத்தி, பணியின்போது இறந்த 120 பேருக்கும், ஓய்வு பெற்ற 60 பேருக்கும், உடனடியாக பணப் பலன்களை வழங்க வேண்டும். தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில், 1800 காலி பணியிடங்களுக்கு, இடைநிலை ஆசிரியர் 12 ஆயிரத்து 596 பேரும்; 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு, 17 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களை விட, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு பணி வழங்கும் வரை, அடுத்த தகுதித்தேர்வை நடத்தக் கூடாது. இவ்வாறு கூறினார்.

    No comments: