Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 31, 2014

    3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

    தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


    சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனு: கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பாணை நவம்பர் 2, 2012ல் வெளியானது. "மொத்தம் 3,589 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி, நவம்பர் 23, 2012" என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கான தேர்வு டிச., 9, 2012 அன்று நடத்தப்பட்டது. டிச., 20, 2012ல் தேர்வு முடிவுகள் வெளியானது. உதவியாளர் பணி நியமனத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கவில்லை. கூட்டுறவு துறை ரீதியான பயிற்சி பெறாதவர்களும் நியமிக்கப்பட்டனர். ஜாதி வாரியான ஒதுக்கீடு, தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை.

    தேர்வு முறையில், விதிமீறல்கள் இருந்தன. எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதி சுப்பையா, "ஆவணங்களை பார்க்கும் போது உதவியாளர் பணிக்கான தேர்வில், முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிய வருகிறது. எனவே, தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு, முறைப்படி தேர்வு நடத்தியே பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என உத்தரவிட்டார்.

    No comments: