Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 29, 2014

    சேமநல நிதி கையாடல்: ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

    சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்களின் சேமநல நிதி ரூ.2 கோடி கையாடல் செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் நலச் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அனைத்து ஆசிரியர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் ரா.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் மு.ஆ.தமிழ்க்குமரன் முன்னிலை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ப.பெருஞ்சித்திரன், மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், அனைத்து ஆசிரியர்கள் நலச்சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஞா.விவேக், மகளிரணிச் செயலாளர் மு.ரேவதி, அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் துரை.மா,வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்.
    ஆர்ப்பாட்ட நிறைவில் உதவிஆட்சியரை சந்தித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர்.

    No comments: