Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 29, 2014

    சத்துணவு காய்கறி மானியம் நான்கு மாதங்களாக 'கட்'மைய அமைப்பாளர்கள் புலம்பல்

    கடந்த 4 மாதங்களாக சத்துணவு மையங்களுக்கு, காய்கறி, மசாலா வாங்குவதற்கான மானியம் வழங்கப்படவில்லை. சத்துணவு அமைப்பாளர்கள் 'கடன்' வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.பள்ளி குழந்தைகளுக்கு, மதிய உணவு திட்டத்தை மறைந்த முதல்வர் காமராஜரும், சத்துணவு திட்டத்தை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் கொண்டு வந்தனர்.
    இத்திட்டம் பொதுமக்கள்டையே வரவேற்பை பெற்றது.இத்திட்டத்தில்,1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, தினமும் 69.50 பைசாவும், 6 முதல் 10 ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தினமும் 79.50 பைசாவும், காய்கறிக்கு 32 பைசாவும், மசாலாவுக்கு 13.50 பைசாவும், விறகுக்கு 24 பைசாவும் தரப்படுகிறது.

    இந்த பணத்தில், காய்கறி, மசாலா, விறகு வாங்க முடியாமல் சத்துணவு அமைப்பாளர்கள் திணறி வருகிறார்கள். இந்த குறைந்தளவு பணமும் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், சத்துணவு அமைப்பாளர்கள், 'கடன்' வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.சத்துணவு அமைப்பாளர்கள் சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறுகையில், ''சத்துணவு மையங்களுக்கு 4 மாதங்களாக மானியம் வழங்காததால், அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர். கொடுப்பதே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், அதையும் 4 மாதங்களாக நிறுத்தினால், எப்படி சத்துணவு மையங்களை நடத்த முடியும்,'' என்றார்.

    No comments: