Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 3, 2014

    அண்ணாமலை பல்கலை., உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபடி, முனைவர் பட்டப்படிப்பு படித்து, அதற்கான கட்டண நிலுவையைச் செலுத்தாததால், 286 உதவி பேராசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது.


    கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 3,020 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2008 - 09ம் ஆண்டில், பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்கள், முனைவர் (பிஎச்.டி.,) பட்ட ஆய்வை, அதே பல்கலைக்கழகத்தில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு, முனைவர் பட்ட கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    இவர்கள், முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு, அடுத்த ஆண்டுக்கான கட்டணம் செலுத்துவது இல்லை. முனைவர் பட்டத்திற்கான, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் போது, முழு கட்டணத்தையும் செலுத்தி பட்டத்தை பெற்றுக் கொள்வது என ஏற்கனவே இருந்த நிர்வாகம் கடைபிடித்து வந்தது.

    இதனால், முனைவர் பட்ட ஆய்வு செய்யும் உதவி பேராசிரியர்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில், 4.5 கோடி ரூபாய் பாக்கி நிலுவையில் உள்ளது. இந்தக் கட்டண பாக்கியை வசூலிக்க, தற்போதைய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    முதல் கட்டமாக, 2008-09ல், பேராசிரியராக சேர்ந்து, முனைவர் பட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், நீண்ட காலமாக கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இவர்கள், 19 ஆயிரம் முதல் 57 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

    இந்நிலையில் இந்த உதவி பேராசிரியர்கள், 286 பேருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் மாத சம்பளத்தை நிறுத்தி உள்ளது. குறிப்பாக, 2008-09ம் ஆண்டில் உதவி பேராசிரியராக சேர்ந்தவர்களுக்கு மட்டும் மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.

    சம்பளம் நிறுத்தம் குறித்து, உதவி பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்ட போது, முனைவர் பட்ட கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: