காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
இதுவரை 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் 15 நாட்களுக்குள் காலியாகவுள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஆண்டு 10 மற்றும் 12- ஆம் வகுப்புத் தேர்வில், மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்த்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக அரசு 45 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2 comments:
Term scheme is worst for students
இன்னும் 15 நாட்களுக்குள் காலியாக உள்ள அனைத்து இடங்களையும் நிரப்பப்படும் செய்தி மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதில் “ கணினி ஆசிரியர்” பணியிடங்களும் அடங்குமா.இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ள செய்தி வரவேற்க வேண்டிய ஒன்று. இந்த திட்டத்தில் 12ஆம் வகுப்பு கணினி ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா. இந்த ஜனவரி 31 2014 க்குள் கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது என்ன ஆயிற்று.
தகவல் வேண்டி காத்திருக்கிறேன்.
Post a Comment