Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, August 15, 2013

    டி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்

    "ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

    ஆகஸ்ட் 17, 18ம் தேதி, டி.இ.டி., தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான பணி ஒதுக்கீட்டு முறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ் முதுகலை ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதால், தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர்.

    இந்த அறிவிப்பால், பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், தேர்வு பணிகளில் முழுமையாக ஈடுபடுவதாகவும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் தெரிவித்து உள்ளதாவது: டி.இ.டி., தேர்வுகளுக்கு, இரு நாட்களே உள்ள நிலையில், முதுகலை ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தேர்வு எழுத உள்ளவர்களின் மனநிலையை பாதிக்கும்.

    அரசு நெறிமுறைக்கு ஏற்ப உரிய முறையில் பணிகளை ஒதுக்கி அறிவித்து உள்ளது. இதை முதுகலை ஆசிரியர்கள் புறக்கணித்தால், அவர்களுக்கும் சேர்ந்து அப்பணிகளை பட்டதாரி ஆசிரியர்களே முழுமையாக ஈடுபட்டு, தேர்வுகளை நடத்தி முடிக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    3 comments:

    Balaji said...

    very good.welcome

    Anonymous said...

    pattathari asiriyakalukkum ithe nilai varumpoluthu theriyum, ippothu puriyathu. ella aasiriyarkalin ottrumaikku throgam ,muthukalai pattathaari asiriyagal ,pattathaari asiriyargal ,idainilai asiriyargal ellorum asiriyarkalthaan, yaarum vaanathil irunthu kuthikka villai.

    Anonymous said...

    muthalil tet exam nallabadiya nadathulaam sir, appuram namma kuraigalai athikarikalidam sollalaam,