Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 28, 2013

    டைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம்; தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு

    தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்வுகள் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு இத்தேர்வு வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

    வரும் 31ம் தேதி தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் ஜூனியர் பிரிவு 4ம் பேட்ஜ் வரை காலை 9.30 மணி முதல் மாலை 4.05 மணி வரை நடக்கிறது. வரும் 1ம் தேதி தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ்க்கு காலை 8.30 மணி முதல் 9.35 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து காலை 10.20 மணி முதல் 3.20 மணி வரை சீனியர் பிரிவுக்கு தேர்வு நடக்கிறது.

    வரும் 1ம் தேதி காலை 10.20 மணி முதல் 12.20 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹை ஸ்பீடு தேர்வுகளும், அன்று மாலை 3.50 மணி முதல் 4.40 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் பிரிவுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.

    இத்தேர்வில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்குரிய ஹால் டிக்கெட்டுகள் அந்தந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் அனுப்பபட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பிரிவு தட்டச்சர் பணிக்கு டைப்ரைட்டிங் அவசியம் என்பதால் பலர் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம்

    நெல்லை மாவட்ட பகுதிகளை சேர்ந்த தேர்வர்களுக்கு செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக், சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக், தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக், வடக்கன்குளம் எஸ்.ஏ ராஜா பாலிடெக்னிக் ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட டைப்ரைட்டிங் நிறுவன உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டிக்கண்ணு, செயலாளர் சுந்தரமுருகன், பொருளாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், முத்துக்குமார், சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    கம்ப்யூட்டர் தேர்வு

    கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டேமேஷன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் பலர் 80 சதவீதத்திற்கும் அதிகமாகவும், முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    No comments: