Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 28, 2013

    6ம் வகுப்பிலேயே ஆய்வக அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்

    "ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, ஆய்வகங்களுக்கு, அழைத்துச் சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்" என மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

    கல்வியில் பின்தங்கிய, 44 ஒன்றியங்களில், 44 மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆர்.எம்.எஸ்.ஏ., மாநில இயக்குனர், சங்கர் பேசியதாவது:

    மாணவர்கள், பல வகையாக இருப்பர். அனைத்து மாணவர்களுக்கும், ஒருவித தனித்திறமை இருக்கும். அதை, கண்டறியும் பணியை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். சில மாணவர்கள், பாடத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், விளையாட்டுகளில், ஆர்வம் அதிகம் இருக்கும். இதுபோன்று, மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதில், மாணவர்களின் திறமையை மேலும் வளர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான், மாணவர்கள், ஆய்வகங்களுக்கு, அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவர்களை, ஆய்வகங்களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியலை விளக்க வேண்டும். மாதிரிப் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு, சங்கர் பேசினார்.

    No comments: