Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 17, 2013

    ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர்! கேள்விக்குறியாகும் கல்வி...

    180 மாணவர்களைக்கொண்ட ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருவதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் அவதியுறுகின்றனர்.
    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ளது சேந்தமங்கலம் கிராமம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் இந்த ஊரில் உள்ள ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளி, ஒரேயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருகிறது. அந்த ஒரு ஆசிரியர் ஐந்தாம் வகுப்புக்கு மட்டுமே பாடம் நடத்துவதால் மற்ற வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    எந்த பாதுகாப்பும் இன்றி, முட்செடிகளுக்கு மத்தியில் பள்ளிக் கட்டடம் அமைந்துள்ளது. இதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வகுப்பறைகளுக்கு வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக பள்ளி செலலும் குழந்தைகளின் உயிருக்கு எந்த உத்தரவாமும் இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

    ஆதி திராவிடர் நல தொடக்கப் பள்ளியின் இந்த அவலநிலை குறித்து, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி கவுரியிடம் கேட்டபோது, இந்த பகுதியில் இதேபோன்று 5 பள்ளிகள் ஒரெயொரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருவதாக கூறினார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஆதி திராவிடர் நல செயலாளர் ஆகியோருக்கு தெரிவித்துவிட்டதாகவும், இதுகுறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    No comments: