Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 10, 2013

    மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இன்று ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று (10ம் தேதி) மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடக்கிறது.
    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒட்டு மொத்த பணிக் கால அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நான்கு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக வட்டார அளவில் ஆர்ப்பாட்டம், 2வது கட்டமாக ஆசிரியர் சந்திப்பு இயக்கம், 3ம் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தற்போது 4வது கட்டமாக மாநில அளவிலான கோரிக்கை மாநாடு சென்னையில் இன்று (10ம் தேதி) நடக்கிறது. இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, சி.ஐ.டியு, மூட்டா உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்கிறது.
    இதில் நெல்லை மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசி‘ரியர் கூட்டணி மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை, மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் சுடலைமணி, பொருளாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்,.

    No comments: