Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, April 7, 2013

    ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை

    "சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
    இந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா உரையை அமைச்சர் கே.பி.முனுசாமி வாசித்தார். அதில், 2010ல் இருந்து நீதித்துறைக்கான இரண்டு ஆண்டுக்கான  நிதியை மத்திய அரசு தரவில்லை என்று குற்றம்சாட்டிப்பட்டிருந்தது.

    நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதா, தமிழக அரசு  நீதித்துறைக்கு  இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.675 கோடி  ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

    தமி்ழ்நாட்டில் நீதித்துறை கட்டமைப்புகளை பலப்படுத்த மத்திய அரசு நிதி தர வேண்டும்  என்று கோரிக்கை வைத்த ஜெயலலிதா, நடப்பாண்டில் புதிதாக 105 நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அவர்  கூறினார்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் உறுதியளித்தபடி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி, சுதந்திரமான நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

    அரசியல் சட்டப்படி மாநில மொழிகளை நீதிமன்றங்களில் பயன்படுத்த வழி வகை உள்ளது என்றும் ஏற்கனவே 4 மாநிலங்களில் அந்தந்த தாய்மொழியில் வாதிடப்படுவதாகவும் ஜெயலலிதா கூறினார்.

    No comments: