Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 1, 2013

    அடிப்படை வசதிகள் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள்

    அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என மூன்று வகையாக பள்ளிகள் செயல்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு அரசு அனைத்து விதமான கட்டுமான வசதி, அடிப்படை வசதிகளை செய்கிறது.
    ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் தனியாரால் இடம்,கட்டட வசதிகள் செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டும் அரசு கொடுக்கும் நிலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்கு நிதியுதவி இல்லாமல் நலிவுற்று அடிப்படை வசதி இல்லாமல் செயல்படுகிறது.

    2007ம் ஆண்டு வரை அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள விகிதத்திலிருந்து ஒரு சதவிகிதம் பராமரிப்பு தொகை வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக பராமரிப்பு தொகையும் வழங்கப்படாததால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர்,கழிப்பறை,காற்றோட்டமான வகுப்பறை வசதிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது போன்ற பள்ளிகள் உள்ள இடத்தில் அரசு பள்ளிகளும் தொடங்கப்படாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர்.அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் படிப்பதை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    1 comment:

    Anonymous said...

    Aided school posting ku panam vangurathu pathi enna solrathu