Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 15, 2013

    உயர் கல்விக்கு ரூ.3,226 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத் தகவல்

    "தமிழக அரசின் சார்பில் உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் சம்பத் கூறினார்.
    விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.

    கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கி பேசுகையில், "உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காகத்தான் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் பயன்பெறுவதற்காக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் 117 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இது தவிர அரசு பொறியியல் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்ப கல்லூரி 2ம், கலைக்கல்லூரி 3ம் உள்ளன. இதில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்" என்றார்.

    அமைச்சர் சம்பத் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கிப் பேசுகையில், "முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 389 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையை அறவே ஒழிக்கவும், தொழில் துறையில் முன்னேற்றமடையச் செய்யவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

    நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால் மாணவர்களின் பங்குதான் அதிகம் என்பதால்தான் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் திட்டக்குடியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்படவுள்ளது" என்றார்.

    No comments: