Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 22, 2013

    வேலைக்கு தகுதியான பட்டதாரிகள் 30 சதவீதம் மட்டுமே: துணைவேந்தர் வேதனை

    காரைக்குடி அழகப்பா பல்கலை கழக இணைப்பு கல்லூரிகளின், முதல்வர்களுக்கான "தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் புதுமை" என்ற தலைப்பில், கருத்துப் பட்டறை, பல்கலைக்கழகத்தில் நடந்தது.
    இதில் தலைமை வகித்த துணை வேந்தர் சேது சுடலைமுத்து பேசியதாவது:
    உலக அளவில் 187 நாடுகளில், இந்தியா மனித வள மேம்பாட்டு குறியீட்டில், 134வது இடத்தில் உள்ளது. தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் 13.5 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு 20 சதவீதம் பெற்றுள்ளது. 30 சதவீத பட்டதாரிகள் மட்டுமே, வேலை வாய்ப்புக்குரிய தகுதியை பெற்றுள்ளனர்.

    இந்த நிலை மேலும் உயர்த்தப்பட வேண்டும், என்பதற்காக பன்னாட்டு பேராசிரியர்களை அழைத்து, பாடத்திட்டங்களில் புதுமையை புகுத்தி, உலக தரத்திற்கு இணையாக பாடத்திட்டத்தை மேம்படுத்தி, மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது
    .
    அழகப்பா பல்கலைகழக பாடத்திட்டத்தில், புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக, பாடத்திட்ட மேம்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார். நிகழ்ச்சியில், திருச்சி பாரதிதாசன் பல்கலை துணை வேந்தர் மீனா, பதிவாளர் மாணிக்கவாசகம், பாடத்திட்ட மேம்பாட்டு மைய இயக்குனர் அலமேலு மங்கை, உதவி பேராசிரியர் மாலதி ஆகியோர் பேசினர்.

    No comments: