Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 18, 2013

    அகவிலைப்படி உயர்வு தாமதம், மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு

    இது குறித்து மத்திய அரசு ஊழியர் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பு பொது செயலாளர் திரு. K.K.N குட்டி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில்  4வது ஊதிய குழு அறிவிப்பின் மூலம் 1986 முதல் 6 மாதத்திற்கு ஒரு முறை மார்ச் மற்றும் செப்டம்பரில் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்படும். இதை எக்காரணத்தை கொண்டும் இழக்க நாங்கள் விரும்பவில்லை, எனினும் எந்தவித அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை.

    இதையடுத்து நாங்கள் மத்திய நிதி அமைச்சகத்திடம் தொடர்பு கொண்ட போது அகவிலைப்படி உயர்வு குறித்த கோப்பு தயார் செய்து மத்திய அமைச்சகத்தின் முடிவிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். ஆனால் கோப்புகள் அனுப்பி ஒரு மாத காலம் முடிந்த பின்னரும் இது குறித்த எந்தவித சாதகமான அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து வரவில்லை. தொடர்ந்து விலைவாசி உயர்வால் அவதிப்படும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்காதது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையில் பாரத பிரதமர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள  கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
    இல்லையெனில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி மதியம் உணவு வேலை இடைவேளையின் போது அனைத்து அரசு அலுவலகங்களிலும்,
    அவரவர் பணிபுரியும் இடத்தில் போராட்டம் நடத்தி, பாரத பிரதமர் அவர்களுக்கு "அகவிலைப்படி உயர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும்" என கோரி தந்தி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    No comments: