Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 8, 2013

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.
    2013-2014 ஆம் கல்வி ஆண்டில் இருந்தது புதிதாக 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அதோடு சேர்த்து மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என இன்று அறிவித்தார்.

    சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என ஜெயலலிதா கூறினார்.

    தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த , 150 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

    No comments: