"அதிக பாசமும், கண்டிப்பும் குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும்" என மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளியில் நடந்த பெற்றோர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
ராம்கோ நிறுவன அதிகாரி கிருஷ்ணமூர்த்தி வெங்கடராமன் பேசியதாவது: வேகமாக வளரும் உலகில் நாம் உறவுமுறைகள் தெரியாமல் குழந்தைகளை வளர்த்து வருகிறோம். குழந்தைகளை பாசமாக வளர்க்க வேண்டும் என நினைத்து அதிக செல்லம் கொடுக்கிறோம்.
கண்டிப்புடன் வளர்க்கும் என்ற நோக்கத்தில் அடக்குமுறையை பின்பற்றுகின்றனர். இவை இரண்டும், குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும். குழந்தைகளுக்கு தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment