Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 13, 2014

    தியாகிகளின் வாரிசு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பு விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்தரவு

    சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த, வி.ஜி.சுப்ரமணியன் தாக்கல் செய்த மனு: என் தந்தை கணேசன், சுதந்திரப் போராட்ட வீரர். என் மகள் பிரியா, பிளஸ் 2வில், 1,159 மதிப்பெண் பெற்றார். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பித்தார்.


    பரிசீலிக்கவில்லை: சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு, மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. என் மகளின் விண்ணப்பத்தை, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டின்படி பரிசீலிக்கவில்லை. தியாகிகளின் மகன், மகளுக்கு மட்டுமே இடம் ஒதுக்க முடியும் என்றும், பேரன், பேத்திகளுக்கு தகுதியில்லை எனவும் கூறப்பட்டது.

    அப்படி பார்த்தால், இந்த ஒதுக்கீட்டின் கீழ், யாருக்கும் இடம் கிடைக்காது. தியாகிகளின் மகன், மகள், இப்போதைய தேதியில், 50 வயதை தாண்டியிருப்பர். புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில், தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் இடஒதுக்கீடு உள்ளது.

    எனவே, என் மகளுக்கும் எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், 15 ஆண்டுகளாக, சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ், யாரும் சேர்க்கப்படவில்லை. ஆண்டுதோறும், தியாகிகளின் பேரன், பேத்திகள்தான் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு தகுதி இல்லாததால், அவற்றை பரிசீலிப்பதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: தகுதியானவர்கள் வராததால் 15 ஆண்டுகளாக, தியாகிகளின் குழந்தைகளுக்கான ஒதுக்கீட்டை நிரப்ப முடியவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, பேப்பர் அளவில், எதற்காக இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும் என தெரியவில்லை.

    அரசு கூறுவது சரியே: கடந்த 15 ஆண்டுகளாக, இந்த ஒதுக்கீட்டின் கீழ் யாரும் வராதபோது இனிமேலும் அவர்கள் கிடைக்கப் போவதில்லை. எனவே, வரும் காலங்களில், மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இந்த ஒதுக்கீட்டு பிரிவை நீக்க வேண்டும்.

    தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீடு, சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள உத்தரவாதத்தின்படி இந்த ஒதுக்கீடு வரவில்லை. அரசின் கொள்கை அடிப்படையில், இந்த ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. இத்தகைய உரிமையை, நிரந்தரமாக நீடிக்க முடியாது.

    எனவே தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு, இடஒதுக்கீடு வழங்க முடியாது என அரசு கூறுவது சரியே. அதில் குற்றம் காண முடியாது. ஆகையால், எதிர்காலங்களில் குழப்பத்தை தவிர்க்க, தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டு உள்ளார்.

    No comments: