Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 3, 2014

    கடிதம் எழுதும் போட்டிக்கு ஒரு பள்ளி மட்டுமே விண்ணப்பம்

    43வது சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் சிவகங்கை மாவட்ட அளவில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே பங்கேற்க விண்ணப்பித்துள்ளது. முறையான தகவலை தெரிவிப்பதில்லை, என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தபால் துறை சார்பில், ஜன.5ல் "கடிதம் எழுதும் போட்டி" நடக்கிறது. மண்டல அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு, "இசை வாழ்க்கையில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது" என்ற தலைப்பில், தென்மண்டல அளவில் மதுரையில் நடக்கிறது.

    இதற்கான விண்ணப்பம் தபால் துறை சார்பில்,கடந்த மாதம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.விண்ணப்பிக்க டிச.18ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி குறித்த அறிவிப்பு, பெரும்பாலான பள்ளிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை, ஒரே ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் மட்டுமே முறையான தகவலோடு பெயர் கொடுத்துள்ளனர்.

    அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடிதம் எழுதும் போட்டி குறித்த அறிவிப்பு, அரசு பள்ளிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை. அப்படியே அறிவித்தாலும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிவிப்பு வருகிறது.

    இது மட்டுமன்றி, பல்வேறு போட்டிகளுக்குரிய தகவல்களும் நீண்ட தாமதத்துக்கு பிறகே அரசு பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசு சார்பில் நடத்தும் போட்டிகளுக்குரிய தகவலை முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

    No comments: