Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 4, 2014

    எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் கைது

    பென்னாகரத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை, இரண்டாவதாக திருமணம் செய்த ஆசிரியரை, போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த முள்ளுவாடியை சேர்ந்தவர் ஆசிரியர் ஆறுமுகம், 37. இவரது மனைவி தில்லையக்கரசி. இவர், பெரும்பாளையை அடுத்த புதுக்கரட்டில், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.
    அரூர் எச்.புதுப்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியராக, ஆறுமுகம் பணியாற்றி வந்தார். இவர், சில மாதத்துக்கு முன், பென்னாகரத்தை அடுத்த, சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது, அரக்காசனஹள்ளியை சேர்ந்த, எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை கடந்த, டிசம்பர், 15ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக, போலீஸாருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. கல்வித்துறை அதிகாரிகளன் முதற்கட்ட விசாரணையில், திருமண செய்த தகவல் உறுதியானதால், ஹெச்.,புதுப்பட்டிக்கு ஆறுமுகத்தை, இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், போலீஸாரின் விசாரணையிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்தது, உறுதியானதால், நேற்று மாலை அவரை போலீஸார் கைது செய்தனர்.

    1 comment:

    Anonymous said...

    oru tr 1st wife oda samathathoda kalyanam pannunaalum thappa, arrest pannuvangala?