விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து விழுப்புரத்தில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடந்த பட்டப்படிப்பு பருவத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, விருத்தாச்சலத்தில் நேற்று துவங்கியது.
கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் நேற்று துவங்கிய விடைத்தாள் திருத்தும் பணியை கல்லூரி ஆசிரியர்கள் கழகத்தினர் புறக்கணித்தனர்.
No comments:
Post a Comment