Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 22, 2014

    சிபிஎஸ்இ பள்ளியில் மாநில கல்வி திட்டத்திற்கு அனுமதி அரசின் மேல்முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி

    சிபிஎஸ்இ பள்ளிக்கு, மேல்நிலை கல்வியை மாநில கல்வி திட்டத்தில் நடத்த அனுமதி வழங்க தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவை எதிர்த்து கல்வித்துறை இயக்குனர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிவகாசி ஸ்ருதி வித்யோதயா பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 10 வகுப்புகள் நடைபெறுகின்றன.
    இப்பள்ளியில் மாநில  அரசு பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு பள்ளி நிர்வாகி அரசுக்கு விண்ணப்பித்தார். அரசு அனுமதி மறுத் ததால் அவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அடிப்படை வசதிகள் இருந்தால் 11, 12ம்  வகுப்பை மாநில அரசு பாடத்திட்டத்தில் நடத்த அனுமதி வழங்கலாம்  என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டத்திலும், 11, 12 வகுப்புகள் மற்றொரு பாடத்திட்டத்திலும் நடத்துகின்றனர். 

    பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன என அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து  தமிழக அரசு 2001ல் ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மேல்நிலை கல்வியை தனியாக பிரித்து (11, 12) மற்றொரு பாடத்திட்டத்தில்  நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத் திட்டத்திலும், மேல் நிலையில் மற்றொரு பாடத்திட்டத்திட்டலும் படிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.  எனவே, பள்ளிக்கு மேல் நிலையில் மாநில அரசு பாடத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து  செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். Ôமாநில அரசு பாட திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. அதில் தலையிட முடியாது.  அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுÕ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    No comments: