Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 5, 2014

    இலங்கை அரசுக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம்

    தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


    புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    மேலும், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதியை  அந்த திட்டம் முடியும் வரை முழுமையாக வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள 1500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் அரசு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும். ஆசியர்களுக்கு உள்ளதைப் போலவே ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மாதந்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் பி. பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். செல்வக்குமார், மாவட்டப் பொருளர் எம். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில தலைமை நிலையச் செயலர் கே. வேலுச்சாமி தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    No comments: