Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, January 13, 2014

    ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கி

    வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, விரைவில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 


    வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, "டெபிட் கார்டுகள்' என்ற பெயரில், வங்கி பண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டையை, ஏ.டி.எம்., இயந்திரங்களில் செருகி, பணம் பெற்றுக் கொள்ளலாம். கணக்கு வைத்துள்ள வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து, எத்தனை முறை வேண்டுமானாலும், பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எந்த கட்டணமும் கிடையாது.ஆனால், பிற வங்கிகளின், ஏ.டி.எம்., இயந்திரங்களில், ஐந்து முறைக்கு மேல், ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும், அதிகபட்சம், 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதை மாற்றி, "கணக்கு வைத்திருக்கும் வங்கியாக இருந்தாலும், பிற வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரமாக இருந்தாலும், ஐந்து முறை மட்டுமே, கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட தொகையை, கட்டணமாக வசூலிக்க வேண்டும்' என, இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கியிடம், சமீபத்தில் கோரிக்கை விடுத்தது.அந்த கோரிக்கையை பரிசீலித்த ரிசர்வ் வங்கி, அதற்கான அனுமதியை, இந்த வாரத்தில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்களில் ஒருவரான, எச்.ஆர்.கான் கூறுகை யில், ""இந்திய வங்கிகள் சங்கத்தின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கு, கட்டணம் விதிக்கப்படலாம்,'' என்றார்.

    1 comment:

    VU2WDP said...

    இப்படியே போனால் தங்கள் பணத்தை வைத்து இருந்ததற்கு வங்கிக்கு பணம் செலுத்தவேண்டியது இருக்கும்.!! வங்கியா இல்லை இதை என்னவென்று சொல்வது. இவையெல்லாம் நுகர்வோர் அமைப்புகளுக்கும், ஆம் ஆத்திமிகலுக்கும் தெரியாதா. துன்பவிட்டு வாலை பிடிப்பார்கள்