தமிழகம் முழுவதும் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை மொத்தம் 1.60 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிந்த பிறகு, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் பணி நியமனம் பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.
. தமிழ் பாடத்திற்கு மட்டும், வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் இருந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தப் பாடத்துக்கான விடைத்தாள்கள் தனியாகமதிப்பீடு செய்யப்பட்டு இறுதி தேர்வுப் பட்டியல் (செலக்சன் லிஸ்ட்)வெளியிடப்பட்டு உள்ளது. இதர பாடங்கள், வழக்கு விவகாரத்தில் சிக்கியிருந்தன.
இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வின் உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்டதேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு (ஜன.10) இரவு வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த பல தேர்வர்கள்இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
போட்டித் தேர்வுக்கான சில முக்கிய விடைகளை மாற்றி உயர் நீதிமன்றமதுரைக் கிளை நவம்பர் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்அடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஜன.17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு: திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக ஜனவரி 17-ஆம் தேதி விழுப்புரம் அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், தங்களது வழக்குகளில் பெற்ற அசல் உத்தரவோடு இதில் பங்கேற்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாதவர்கள், இப்போது இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவர்களும்பங்கேற்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்று, திருத்தப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவர்கள் இதில் பங்கேற்க வேண்டியதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.வெளியிடப்பட்டு இருப்பது, தற்காலிக தேர்வு பட்டியல் தான்.இது, வழக்கின் இறுதி முடிவிற்கு உட்பட்டது.
இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது
No comments:
Post a Comment