Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 8, 2014

    பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை!

    பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு நேற்று மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    "தொடக்க கல்வி துறையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலமாக பள்ளிக்கல்வித்துறையில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனறர். அதேபோல, பள்ளி கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.


    மதுரை மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களிலும் பள்ளி உதவியாளர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சீரான தேர்ச்சி விகிதம் உள்ளது. எனவே, அங்கு வேலைபார்க்கும் சுமார் 150 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடவேண்டும்.

    எஸ்.எஸ்.எல்.சி. ,மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கொண்டு வரப்படும் மாற்றங்களை இந்த செயற்குழு வரவேற்கிறது. அதே சமயத்தில் மாணவர்களின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர வேண்டும்."

    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    2 comments:

    Anonymous said...

    வரவேற்க கூடிய தகவல். மிக்க நன்றி. மேலும்
    பள்ளிக்கல்வித்துறையைச்சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் ஒரு ஊதிய உயர்வு மட்டுமே கிடைக்கிறது.ஆனால் தொடக்கக்கல்விதுறை பட்டதாரி ஆசிரியர்கள் ( BT-->MIDDLE HM-->AEEO--->High HM )உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் இரு ஊதிய உயர்வு கிடைக்கிறது. இந்த முரண்பாட்டை அரசு சரி செய்ய வேண்டும்.
    [குறிப்பு:இங்கு பட்டதாரி ஆசிரியர் பதவிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியராக பணிமாறுதல் பெறுபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதில்லை]

    கல்விக்கோயில் said...

    நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி என்பது பணி மாறுதல்தானே தவிர பதவி உயர்வு அல்ல, எனவே அங்கு ஊதிய உயர்வு ஏதும் இல்லை.
    மேலும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் 3% ஒதுக்கீடு பெற்ற தொடக்கக் கல்வித் துறையைச் சார்ந்தவர்களை ஏற்க மனமின்றி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணி மாற்றத்தில் 40% ஒதுக்கீடு கேட்பது என்ன விதமான நியாயம் எனத் தெரியவில்லை.