Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 21, 2014

    3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

    அரசு ஊழ்யர்கள் சங்கத்தினர், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை, 1 நாள் அடையாள உண்ணாவிரதம் இரு்நதனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், தொகுப்பு முறை ஊதியத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    தற்போது தமிழ்நாடு முழுவதும், மாவட்டம் தோறும், தாலுகா தலைமை இடங்களில் சங்கத்தினர் 1 நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

    கமுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு வட்டார சங்க தலைவர் ஜி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வட்டார செயலர் கே.நாகலிங்கம், உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலர் செ.கணேசமூர்த்தி சிறப்புரையாற்றினார். மற்றும் மாவட்ட இணை செயலர் கே.மணி மொழி, மாவட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் எஸ்.முத்து முருகன்,  மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க துணை தலைவர் கே.சிவனு பூவன், மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க செயலர் ஏ.முருகேசன், வட்டார செயலர் என்.மூக்கூரான், நிறைப்பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். உண்ணாவிரதத்தில் 92 பெண் ஊழியர்கள் உள்பட 163 பேர் பங்கேற்றனர். வட்டார பொருளாளர் ஆ.பரமசிவம் நன்றி கூறினார்.

    No comments: