Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 12, 2014

    மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்களிடம் 2 நாளாக தொடர் விசாரணை

    மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் நிவேதா (16).
    அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிவேதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.நிவேதாவின் தாய் புவனேஸ்வரி, புதுவண்ணாரப்பேட்டை போலீசில் அளித்த புகாரில், பள்ளி ஆசிரியர்கள் திட்டியதால் தான் எனது மகள் இறந்தாள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய கோரி, கடந்த 2 நாட்களாக பொதுமக்கள், மாணவியின் உறவினர்கள் மறியல் மற்றும் பள்ளி முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியை மற்றும் மாணவ, மாணவிகளிடம் நேற்று முன்தினம் இரவு போலீசார் விசாரணை நடத்தினர்.நேற்று இரண்டாவது நாளாக விசாரணை தொடர்ந்தது. இதனால், நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    No comments: