Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 21, 2014

    பிளஸ் 2 வினா - விடை புத்தகம்: 2.50 லட்சம் பிரதிகள் விநியோகம்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வினா - விடை புத்தகத்தை கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார்.


    சேலம் ஜெயராம் பப்ளிக் ஸ்கூல், வைஸ்யா கல்லூரி மற்றும் நரசுஸ் சாரதி கல்லூரி நிர்வாகிகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சிக்காக வினா விடை புத்தகத்தை அச்சடித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கினர். அவற்றை, சேலம் கலெக்டர் மகரபூஷணம் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    சி.இ.ஓ., ஈஸ்வரன் கூறியதாவது: கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சேலம் மாவட்டம் 89.4 சதவீத தேர்ச்சியை எட்டியது. அப்போது 18 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு லட்சம் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் 7 சதவீதம் அதிகம் கிடைத்தது. 2014ல் 25 லட்சம் ரூபாய் செலவில் 2.50 லட்சம் பிரதிநிதி அச்சடிக்கப்பட்டு கலெக்டரால் வெளியிடப்பட்டுள்ளது. அவை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் 165 பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் 95 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்கு உண்டான முயற்சியை எடுத்துள்ளோம்.

    அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்காக 3.20 லட்சம் பிரதி அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சியை அதிகரித்து மாநில அளவில் சேலம் மாவட்டம் சிறப்பிடத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: