Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, November 3, 2013

    "நாம் இருவர்; நமக்கு இருவர்": கவலைக்கிடமான அரசு பள்ளி

    மசினகுடி அருகே, சிங்காரா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இப்பள்ளியை, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர்களின், எண்ணிக்கையை உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள, சிங்காரா மின்நிலையம் பகுதியில், கடந்த 1951ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது, மின் நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் குழந்தைகள், அங்கு கல்வி பயின்று வந்தனர். நாளடைவில் பணிகள் குறைந்து, அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால் பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது.

    தற்போது இங்கு மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது. இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். நான்கு மாணவர்கள் மட்டுமே ரெகுலராக வந்து செல்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    நாம் சென்று பார்த்த நாளில், இப்பள்ளிக்கு 4ம் வகுப்பு மாணவி திவ்யா, 5ம் வகுப்பு மாணவன் மணிகண்டன் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களும், சிங்காரா சேர்ந்த மாணவர்கள் இல்லை; 7 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து, பேருந்தில் வந்து செல்கின்றனர். சிங்காரா பள்ளி நிலவரம் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    No comments: