Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 30, 2013

    இந்திய மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டால் பட்டம் பறிபோகும்

    தமிழகத்தைச் சேர்ந்த 7,000 மாணவர், வெளிநாடுகளில் படித்து வரும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவதில் மோசடியில் ஈடுபட்டால், அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் ஆராய்ச்சி, மருத்துவம், பொறியியல் மேற்படிப்புகளை படித்து வருகின்றனர். இந்திய மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் பல வகையான கல்வி உதவித்தொகையை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.

    ஆனால், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களில் சிலர், கல்வி உதவித்தொகை மற்றும் கட்டண சலுகை பெற போலி ஆவணங்களை அளித்துள்ளதாக இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு மற்றும் யு.ஜி.சி.,க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிலும், இந்திய மாணவர்கள், போலி ஆவணங்கள் கொடுத்து கட்டண சலுகை அல்லது கல்வி உதவித் தொகையை மோசடியாக பெற்றிருப்பதாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து புகார் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும்; அவரது பட்டம் ரத்து செய்யப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடையூறு இருக்கும் பட்சத்தில், அது குறித்து யு.ஜி.சி., அல்லது இந்திய பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்புக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சென்னையை சேர்ந்த 494 பேர் உட்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 7,000 மாணவர் படித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: