Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 27, 2013

    அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?

    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன.
    அரசு பள்ளிகளில் பணியாற்றும் 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் 51 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 28 பேர் என பலர் இவற்றை தாக்கல் செய்திருக்கின்றனர். இதே போல், மற்ற துறை அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ள அவமதிப்பு வழக்குகளை சேர்த்தால், அவை இன்னும் அதிகமாகும்.

    நீதித்துறையின் முயற்சியால் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைக்கப்பட்டாலும், அரசு உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. எனவே, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் நீதித்துறையின் பணியில் குறுக்கிடுவது போல் இருக்கக் கூடாது.

    No comments: