Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 28, 2013

    "பெண் கல்வியால் தலைமுறையே வளர்ச்சி அடையும்"

    "ஒரு வீட்டில் ஆண் அதிகமாக படித்தால், அந்த குடும்பம் மட்டுமே, வளர்ச்சி அடையும்; ஆனால்,அதே வீட்டில் பெண் அதிகம் படித்தால், அந்த தலைமுறையே வளர்ச்சி பெறும்,&'&' என, கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.


    "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில், ரமேஷ் பிரபா பேசியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., படித்து, பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள், வீட்டின் வறுமை காரணமாக, படிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாலிடெக்னிக்கில் சேர்ந்து விடுங்கள்; மூன்றாண்டுகளுக்குப் பின், "வீட்டின் பொருளாதாரச் சூழல், சரியாகி விட்டது, ஆனால், இப்போது பொறியியல் படிப்பதற்கு காலம் கடந்து விட்டது" என, கவலைப்பட வேண்டாம். பாலிடெக்னிக் முடித்து, நேராக பொறியியலில், இரண்டாம் ஆண்டு படிக்கலாம்.

    பெண்கள், நிறைய படித்து, உயர்வடைய வேண்டும். பெண்கள் எந்த நாட்டில், அதிகளவில் கல்வி பெறுகின்றனரோ, அந்நாடு எளிதில் வளர்ச்சி அடையும். ஒரு வீட்டில் ஆண் அதிகமாக படித்தால், ஒரு குடும்பம் மட்டுமே, வளர்ச்சி அடையும்; ஆனால், அதே வீட்டில் பெண், படித்தால், அந்த தலைமுறையே வளர்ச்சி பெறும். பெரும்பாலும், நமது மாணவர்கள் செய்யும் பெரிய தவறு, கடந்த ஆண்டுகளில் வெளிவந்த கேள்வித் தாள்களை வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட கேள்விகள் மட்டுமே வரும்; மற்றவை வராது என, நினைத்துக் கொள்கின்றனர்.

    இது தவறு; கேள்வித்தாள்களை வைத்துக் கொண்டு, ஜாதகம் கணிக்காதீர்கள். அவ்வாறு, எதிர்பார்த்த கேள்விகள் வராத போது, மனம் சோர்வடையும். எனவே, இது தான் வரும்; இது வராது என, நினைக்காதீர்கள் அதே போல், தேர்வு அறைக்கு செல்லும் போது, துணுக்குகளை கொண்டு செல்லாதீர்கள. குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என, நினைக்காதீர்கள். தேர்வில், வெற்றி, தோல்வி என்பது சகஜம். தோல்வி ஏற்படும் போது, விபரீதமான முடிவுகளை எடுக்காதீர்கள். சோதனைகளை, சாதனைகளாக்க பழகுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

    No comments: