Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 25, 2013

    உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாளை சட்டப்பேரவை முன் மறியல் போராட்டம்

    காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வரும் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக அதன் நிர்வாகிகள் மு.சீத்தாராமன், பிரேமதாசன் கூறியது:


    சம்மேளனத்தில் இணைந்துள்ள சங்கங்களில் ஒன்றான தனியார் பள்ளி ஊழியர் சம்மேளனம் ஊழியர்கள் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

    இவர்களில் 8 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு இதுவரை அவர்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கங்கள் சம்மேளனமும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

    சனிக்கிழமை முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அவர்களை இதுவரை அழைத்துப் பேசவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும். அனைத்து இணைப்பு சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    மறியல் பேரணி கம்பன் கலையரங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு புறப்பட்டு சட்டப்பேரவையை அடையும். புதுவை அரசு உடனே தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனத்தெரிவித்தனர்.

    No comments: