Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 1, 2013

    பள்ளிக் கல்வியை வணிகமயமாக்க மத்திய அரசு திட்டம் : சிபிஎம் எதிர்ப்பு

    பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட் டம் புதனன்று (அக்டோபர் 30, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. 

    பள்ளிக்கல்வியை வணிகமாக்குவதா? : மத்திய அரசு பள்ளிக்கல்வியை வணிகமயமாக்கும் அரசு- தனியார் கூட்டு (Public Private Partnership) திட்டத் தின்படி பின்தங்கிய பகுதிகளில் மாதிரிப்பள்ளிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஏற் கனவே, தமிழகத்தில் தனியார் பங் களிப்பு இல்லாமல் மாநில அரசே மாதிரிப் பள்ளிகளை பின்தங்கிய பகுதிகளில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பின்தங்கிய நிலைமை இல்லாத பகுதிகளில் மாதிரிப்பள்ளிகளை தொடங்க விண்ணப்பிக்குமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின்படி, மத்திய கல்வி வாரியத்தின் (CBSE) அனுமதியோடு 356 பள்ளிகள் தொடங்க தனியாருக்கு அனு மதி வழங்கப்படவுள்ளது.

    இதற்குத் தேவையான நிலம் ஏற்பாடு செய்து கொடுக் கும் பொறுப்பு மாநில அரசைச் சார்ந்த தாகும்.இந்த அறிவிக்கை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசே நேரடியாக தனியார்- அரசு கூட்டு என்ற பெயரில் பள்ளிக்கல்வியை தனியார் மயமாக்கும், வணிக மயமாக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் - மாநில அரசின் உரிமையைப் புறக்கணிக்கும் அத்துமீறல் நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

    தமிழக அரசு, மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழகத்தில் மத்திய அரசே நேரடியாக மாதிரிப்பள்ளிகளை நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், தேவைப்படும் பகுதிகளில் தமிழக அரசே மாதிரிப்பள்ளிகளை திறந்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள் கிறது.

    No comments: