Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 19, 2013

    அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி!

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் கடந்த மாதம் அரசு அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் உடனடியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து அகவிலைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று நவம்பர் மாத சம்பளத்துடன் 10% அகவிலைப்படி சேர்த்து வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    No comments: