Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 21, 2013

    வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

    திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    காந்திகிராம கிராமிய பல்கலை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு:

    திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. பின், நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை பெற்றது. இதன் அமைப்பு விதிகளில் (எம்.ஓ.ஏ.,) திருத்தம் செய்ய வேண்டுமானால், பல்கலை செனட் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,), வேந்தர் ஒப்புதல் பெறவேண்டும். இறுதியில் சங்கங்களின் பதிவாளர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    துணை ஜனாதிபதியின் (பல்கலை வேந்தர்) செயலகத்திலிருந்து வந்த கடித அடிப்படையில், அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய 2011 ல் செனட் கூட்டம் நடந்தது. இதன் தீர்மானத்தின்படி விதிகள் திருத்தத்திற்கு சங்கங்களின் மாவட்ட பதிவாளர் ஒப்புதல் அளித்தார். இது சட்டத்தை மீறிய செயல்.

    பல்கலை வேந்தராக ரெனானா ஜாப்வாலாவை நியமித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் 2012 மார்ச் 30 ல் உத்தரவிட்டார். விதிகள்படி, பல்கலை செனட்தான் வேந்தரை தேர்வு செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பு.

    அமைப்பு விதிகள் திருத்தத்திற்கு, இதுவரை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசின் உயர்கல்வித்துறை இணைச் செயலாளர், தன் அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, ரெனானா ஜாப்வாலா வேந்தராக செயல்பட தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.

    நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். மத்திய உயர் கல்வித்துறை இணைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    No comments: