Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, August 6, 2013

    ஒரு இடைநிலை ஆசிரியரின் ஏக்கம்!!!

    தமிழ்நாட்டு ஆசிரியர் சங்கங்களில் வலுவானதும் வலிமையானதும் ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்கள்தான். தற்பொழுது 6வது ஊதியக்குழுவில் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருப்பவனும் இடைநிலை ஆசிரியர்தான். அனைத்து சங்கங்களும் தனிச்சங்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கும்
    இத்தருணத்தில் அரசாங்கம் இந்த விசயத்தை பற்றி யோசிக்க தொடங்கியிருப்பதாக வந்துள்ள செய்தி ஒரளவு ஆறுதல் அளித்தாலும் சங்கங்கள் தங்களிடம் உள்ள காழ்புணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை அறிவித்தால் நிச்சயம் அரசாங்கத்தின் பார்வையை நம் பக்கம் திருப்பலாம். கடுமையான போராட்டங்கள் இல்லாமல் தீர்வு என்பது எட்டாக்கனியாகி விடும். பல ஆசிரியர்கள் மனக்குமுரல்களை நம்மிடம் தொடர்ந்து கொட்டி வருவதை சங்க தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது. எத்தனையோ போராட்ட வடுக்களை தாங்கிய தலைவர்களை பெற்றுள்ள இயக்கங்கள் இதற்கான முன் வடிவை எடுக்க வேண்டும். கடந்த கால ஒன்றுபட்ட போராட்டங்களில் நடந்தது போல் அல்லாமல் களத்தில் சூடு குறையாமல் கடைசி வரை போர்குணமிக்க வீரர்களாய் களம் காண்போம். வெற்றி கிட்டும் வரை போராடுவோம். இறுதி வெற்றி நமதே என்ற இலட்சிய வாசகத்தை மனதில் தாங்கி களம் காண எத்தனையோ இலட்சம் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இயக்கத்தலைவர்களே ஒன்றுபடுங்கள். ஒன்று திரட்டுங்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சணை தீராமல் இனி தமிழ்நாட்டில் இயக்கம் நடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும். நாம் சேர்ந்து அழுவோம். நம் அழுகுரல் ஆட்சியாளர்களின் செவிப்பறையை தட்டட்டும். தொடர்ந்து ஏமாறுவதற்கு இடைநிலையாசிரியர்கள் ஒன்றும் புரியாதவர்கள் அல்ல. நமது ஒன்றுபட்ட சக்தி என்பது நிச்சயம் நம் துயரோட்டும். 

    மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா இருக்கவிடாது.

    ஒய்ந்தேன் என மகிழாதே
    உறக்கமல்ல: தியானம்.
    பின் வாங்கல் அல்ல பதுங்கல்

    எனது வீணையின் மீட்டலில்
    கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
    உனக்கு நரையேற்றும் காலங்கள்.

    எனது கொடி பறக்கிறது
    அடிவானத்துக்கு அப்பால்’
    (நன்றி: கவிதை : பசுவய்யா) .

    6 comments:

    பட்டயம் பெற்றும் GP:2800 பெறும் மக்கள்.. said...

    ஒன்றுபட்ட போராட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல்
    அரசிடம் "சரியான விடையை தேர்ந்தெடு.." என்ற வகையில் பலதரப்பட்ட கோரிக்கை பட்டியலை கொண்ட ஒரு புத்தக வடிவிலான போராட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தாமல்,
    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஒன்றை மட்டும் முன்நிறுத்தி போராட்டத்தை அறிவித்தால் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினை தீரும்..

    இந்த ஒற்றை கோரிக்கை போராட்டத்தை அறிவிக்க முன்வராத பேரியக்கங்களை நம்பி,
    இதுவரை கண்துடைப்பிற்ககாக மட்டுமே போராட்டங்கள் நடத்தப்படுகிற உண்மை தெரியாமல் அநேக போராட்டங்களில் எழுச்சி்யுடனும், "தங்கம் செய்யாததை நம் சங்கம் செய்யும்" என்ற குருட்டு நம்பிக்கையுடனும் பங்கேற்று இந்நாள்வரை ஏமாற்றம் ஒன்றை மட்டுமே போராட்டத்தின் பலனாய் பெற்ற இடைநிலை ஆசிரியர்களில் நானும் ஒருவன்..

    நம் நிலை மாறுவது எப்போது...?

    மாணவர்களின் அறியாமை இருளை போக்கி அறிவொளி ஏற்றி,
    ஒற்றை கோரிக்கை போராட்டத்தை அறிவிக்க முன்வரும் சங்கத்தை காண வழிமேல் விழிவைத்து காத்திருக்கும்
    "ஓய்வூதியம், 9300-34800 GP:4200 இல்லாமல்"
    இருளில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்...

    தீக்குளிக்க / திருவிளக்கு ஏற்ற அரசின் தீக்குச்சியை எதிர்நோக்கி,
    பட்டயம் பெற்றும் GP:2800 பெறும் மக்கள்...

    Anonymous said...

    AEkkam theerattum.

    KALVI said...

    onru paduvom
    poraduvom vettri namathey.......

    KALVI said...

    onru paduvom
    poraduvom
    vettri peruvom
    iruthi vettri SG ASST-KKEY

    THENI MARI said...

    Quick

    THENI MARI said...

    Central government second grade teachers tet எழுதனும். அதை tamilnadu government follow பன்னுகிறது.central government second grade teachers salary 9300-34800 GP-4200 தருகிறது
    அதை மட்டும் tamilnadu government follow பன்ன மாட்டேங்குது.ஏன் என்று கேளுங்கள் தலைவர்களே