Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 11, 2013

    புதிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டுபிடித்து மாணவர் சாதனை

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை பயோ டெக்னாலஜி மூன்றாமாண்டு மாணவர் கோமதி நாயகம் , "குளோனிங்" முறையில் எதிர்ப்பு சக்தி மருந்து கண்டு பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

    அவர் கூறியதாவது: "மருத்துவ துறையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை, பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த வகை எதிர்ப்பு சக்தி மருந்துகள் , மனித உடலுக்குள் அடிக்கடி செலுத்தப்படுவதால், நுண்கிருமிகள் வலுப்பெற்று, அந்த மருந்துகளை செயலழிக்க செய்து விடுகிறது. இதனால் 50 சதவீதம் எதிர்ப்பு சக்தி மருந்துகளே, நோயை தடுக்கின்றன.

    இது தொடர்பாக, பெங்களூர் இன்டியன் அகாடமி ஆப் சயின்ஸ் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்தேன். அதன் பின், பாரதிதாசன் பல்கலை பேராசியர் அன்பரசு, ஆராய்ச்சியாளர் பென்சி தங்கப்பன் ஆகியோருடன் இணைந்து, மூன்று மாதம் ஆராய்ச்சி செய்தேன். கேஏபிடி ஜீனை எடுத்து, பாக்டீரியாவின் மரபணுவிடன் சேர்த்தேன். பின் பாக்டீரியாவின் புரதமுடன், கே.ஏ.பிடி. புரதமும் வளர்ச்சியடைந்தை கண்டுபிடித்தேன்.

    இந்த மருந்திற்கு, "காபிட்-ஆம்ப்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்து செலுத்தினால், 100 சதவீதம் பக்க விளைவுகள் எதுவும் கிடையாது," என்றார்.

    இவருக்கு, இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் இவரது ஆராய்ச்சி கட்டுரை முடிவினை பெற்றுக்கொண்டு, பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளதென, பல்கலை வேந்தர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

    No comments: