Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, August 18, 2013

    அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலினை

    அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார். 

    மத்தியபிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அகர்-மால்வா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், 'அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்துவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். 

    இதைப்போன்ற விவகாரங்களில் மத்திய பிரதேச மாநில அரசு தனக்கே உரிய தனித்தன்மையுடன் செயல்படும். இவ்விவகாரத்தில் இதர மாநிலங்களின் செயல்பாட்டை நாங்கள் பின்பற்ற மாட்டோம்' என்று கூறினார். 

    ஏற்கனவே, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக சத்தீஸ்கர் மாநிலம் அறிவித்திருந்தது. 

    மத்திய பிரதேசத்தை பொருத்தவரை தற்போதைய நிலவரப்படி, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், சிறப்பு டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆகவும், இதர பிரிவு அரசு ஊழியர்களுக்கு 60 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இவை அனைத்தையும் சமப்படுத்தி அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 62 ஆக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

    No comments: