Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, September 7, 2012

    இளங்கலை மற்றும் முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான தேசிய அளவில் தகுதித் தேர்வுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்

    தமிழக அரசின் செய்தி குறிப்பு எண். 529 நாள். 07.09.2012 பதிவிறக்கம் செய்ய...
    பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் சேர நாடு முழுமைக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்று இந்திய பல் மருத்துவக் கழகம் அனுப்பியுள்ள அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.


    முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய பல் மருத்துவக் கழகம் அனுப்பியுள்ள அறிவிக்கையின் படி, தமிழகத்தில் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே, இந்திய மருத்துவக் கழகம் அனுப்பிய அறிக்கையில், பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு அனுமதி மறுத்ததைப் போன்றுதான், பல் மருத்துவப் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வை தமிழக அரசு மறுக்கிறது.

    தமிழகத்தில் 2005ம் ஆண்டு முதலே தொழிற்கல்வி படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுவிட்டது. நுழைவுத் தேர்வுக்கு ஏழை, எளிய, கிராமப்புர மாணவர்கள் அதிகம் செலவழித்து பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி எடுக்க முடியாததால், அவர்கள் நுழைவுத் தேர்வுகளில் பின்தங்கி விடக் கூடாது என்பதால், அவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ஒருபுறம் பயிற்சி வகுப்பு என அதிகமான தொகையை மாணவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் பயிற்சி வகுப்புகளை முடக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இட ஒதுக்கீடு அளித்து கலந்தாய்வு முறையில் தொழிற்கல்வியில் மாணவ சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது புதிதாக நுழைவுத் தேர்வு முறை அறிமுகமானால், ஏற்கனவே உள்ள நடைமுறை பாதிப்புக்குள்ளாகும்.

    எனவே, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறைக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த தேர்வு முறையில் இருந்து தமிழகத்தை விலக்கி வைத்தும், ஏற்கனவே உள்ள சுமூகமான நிலையைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

    No comments: