Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, September 20, 2012

    அண்ணாமலை பல்கலையில் தொடரும் உண்ணாவிரதம்

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால பாடப் பிரிவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நேற்று மூன்றாம் நாளாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடப்பிரிவுகள் (இன்டகிரேட் கோர்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இப்பாடப் பிரிவுகள் அரசு அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியர் கடந்த 17ம் தேதி பல்கலை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

    மூன்றாவது நாளான நேற்று, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் எதையும் கேட்காமல் கோஷம் எழுப்பினர். பேச்சு வார்த்தையின் போது, ஆத்திரமடைந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பிரகாஷ் என்பவர், தனது சான்றிதழ்களை வீசியெறிந்து, "வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவே தயாராக இல்லை&' என, ஆவேசமாகக் கூறி வெளியேறினார். அதிருப்தியடைந்த பேராசிரியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள மாணவர்கள் மயக்கமடைந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    No comments: