Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, September 23, 2012

    ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள்

    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம், மங்களூர் வட்டாரத்தில், தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, நாளை முதல், 30ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்ல, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், வடலூரில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    வரும், 27ம் தேதி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்; 28ம் தேதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களும்; 29ம் தேதி, தலைமையாசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தென் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும் நடக்கிறது. விடுமுறையில் நடைபெறுவதால், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், அங்கு நடக்கும் முகாமில் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: