Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 17, 2012

    ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுஎந்த நேரத்திலும் வெளியாகும்: தேர்வு வாரிய தலைவர்


     தமிழ்நாட்டில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு தகுதித்தேர்வும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியேநடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளைஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள்எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டதால், அனைவரும் தேர்வு முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.இந்த தகுதித்தேர்வுமூலமாக சுமார் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 5 ஆசிரியர் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 60சதவீத மதிப்பெண் அதாவது, 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில், முழுக்க முழுக்க தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரிய நியமனம், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்து பதிவுமூப்பு மூலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியிடம் கேட்டபோது, ‘தகுதித்தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்வு முடிவு எந்த நேரத்திலும் வெளியாகும்’ என்றார்.தகுதித்தேர்வு மிகவும் கடினமான இருந்ததாகவும் விடை அளிக்க நேரம் போதாது என்றும் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுமே புகார் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில், தகுதித்தேர்வில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றும் வெவ்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.ஏறத்தாழ 23 ஆயிரம் ஆசிரியர் பணிஇடங்களை நிரப்ப வேண்டியுள்ளதால், தகுதித்தேர்வில் தேவையான அளவுக்கு தேர்ச்சி வரவில்லை என்றால் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுமா? டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள தகுதித்தேர்வு மூலம் எஞ்சிய காலி இடங்கள் நிரப்பப்படுமா? என்று தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குழம்பிப்போய் உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) உத்தரவின்படி, தகுதித்தேர்வில், எஸ்.சி., எஸ்.டி. பி.சி., எம்.பி.சி. போன்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5சதவீதம் வரை மதிப்பெண் குறைக்கலாம்.எனவே, போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்று நிர்ணயிக்கப்படலாம். அதற்கு மேல் குறைத்தால் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கருதுகிறது.

    4 comments:

    MUHILNIHIL said...

    ap state il oc 60% BC 50%SC 40% ena kuraithu irrukkirarkal.

    Anonymous said...

    please fill the teacher vacancy in mark basics

    Anonymous said...

    wlcm

    Anonymous said...

    fill vacancy on mark basis and give them time to psss in TET after posting