Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, August 27, 2012

    உதவித் தொகை முறைகேடு: வருவாய்த் துறையினரும் காரணம்

    ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு வருவாய்த் துறையினரும் காரணம் என்றார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:


     நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையில் நடந்த முறைகேடு விவகாரத்தில் 72 ஆசிரியர்களும், ஓர் ஆதிதிராவிடர் நல அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

     கல்வி உதவித் தொகைக்கு ஆதிதிராவிடர் நலத் துறையிலிருந்துதான் நிதி அளிக்கப்படுகிறது. ஆனால், நிதியை வழங்குவது கல்வித்துறைதான். ஆதிதிராவிடர் நல அலுவலர்களாக உள்ளவர்கள் வருவாய்த் துறையினர் என்பதால் அவர்களும் இதற்குக் காரணமாகின்றனர்.

     ஆதிதிராவிடர் நலத்துறைத் துறைக்கும் இந்த முறைகேட்டுக்கும் சம்பந்தம் இல்லை.

     2010-11-ல் இந்த முறைகேடு நடந்துள்ளதால், அப்போது ஆட்சியில் இருந்த திமுகதான் இதற்கு மூலக் காரணம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் நலத் துறை மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அமைச்சர்.

    No comments: