Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 29, 2012

    பள்ளி வாகன விதிமுறை செப்டம்பர் 3க்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

    சிறுதி சுருதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


    இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய விதிமுறைகளைத் தாக்கல் செய்ய ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் கேட்ட தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குறைஞர் நவநீதகிருஷ்ணன், மேலும் அவகாசம் கோரினார். அதற்கு, தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்னும் கூடவில்லை என்றும், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதில் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

    இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. எத்தனையோ விஷயங்களுக்கு அவசரமாக அமைச்சரவை கூடி விவாதிக்கும் போது, மிக முக்கியமான விஷயத்துக்கு ஏன் இதுவரை அமைச்சரவைக் கூடவில்லை. இது முக்கியமான விஷயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லைய என்று கேள்வி எழுப்பினர்.

    தற்போது உள்ள பிரச்னைகளிலேயே மிக முக்கியப் பிரச்னையாக இதனைக் கருதி,  விரைவில் வரைவு விதிமுறைகள் அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வழக்குறைஞர் நவநீத கிருஷ்ணன் உறுதி அளித்தார்.

    இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய தினம் கட்டாயமாக வரைவு விதிமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    No comments: